*****************************
📚 _இன்றைய பொது அறிவு_📚
*****************************
⚠️ நாட்டை வந்தடைந்துள்ள உலகின் மிகவும் ஆபத்தான பறவை⚠️
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05.07.2023) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது.
🔹விலங்கு பரிமாற்றத் திட்டம்
இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையும் தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.
📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌
எமது குழுமத்தில் இணைந்து கொள்ள கீழே காணப்படும் இலக்கத்திற்கு தனிப்பட்ட முறையில் Link என அனுப்பி வைக்கவும்.
📲 0759971259
Comments
Post a Comment